Saturday, February 28, 2009



அரைக் கம்பத்தில் தொப்புள் கொடி தொகுப்பு: அறிவுமதி



ஈழத்தில் அழித்தொழிக்கப்படும் நம் தமிழ் இனத்தின் இழப்பைத் தாங்க முடியாமல் குமுறும் இதயங்களின் துடிதுடிப்பு இந்தக் கவிதைகள். மனசைப் பிசைந்து, இதயத்தின் ஆழம் வரை வேரோடி, உயிர் உருவும் கவிதைகள். மனதை ஆற்றுப்படுத்த முடியாமல் படிக்கும்போது தவிக்கப்போவது நிச்சயம்.

பரிவும், கோபமும், ஆற்றாமையும் கொண்டு கவிஞர்கள் கண்ணிர்க் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத புத்தகம். படிக்க நேர்ந்தால், தமிழ் இன உணர்வை ஆறுதலோடு பகிர்ந்து கொள்ளலாம்.

-ஆனந்தவிகடன்

விகடன் சொன்னது சரிதான். படித்து உணருங்கள்.

புத்தகம் : அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி / சாரல் வெளியிடு / 160ரூபாய்

Thursday, February 26, 2009



'சிட்டி'சன்

நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை

அடுக்குப் பானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று
- தாயம்மா



ஏ.......மனிதா....
எதிர்க்காற்று வீசும்
மேட்டுச் சாலையில்
பழைய மிதி வண்டியில்
கைப்பிள்ளையோடு
தனது மனைவியை
மூச்சிரைக்க
மிதித்துச் செல்பவனிடம்
கேட்டறிய வேண்டும்
இல்லறத்தின் பொருளை.



அமைதி
கோவிலுக்குப் போ என்றார்கள்
சர்ச்சுக்குப் போ என்றார்கள்
மசூதிக்குப் போ என்றார்கள்
பாருக்குப் போய் பீர் அடி என்றார்கள்
பீச்சுக்குப் போ என்றார்கள்
' என்ன சார் ஆச்சு ? '
பரிவோடு கேட்டான் இஸ்த்ரி முருகன் !
மனக்கவலை சொன்னேன்-
மருந்து போல் ஒரு வார்த்தை சொன்னான்
"வீட்டுக்கு போ வாத்தியாரே"
-கண்ணன்




பட்டாம்பூச்சி விற்பவன்

பதிவுகள்
மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்.
-நா. முத்துக்குமார்
மார்கழிமாத கோலத்தின்
புள்ளிகளாகிப் போயின
தவறிவிழுந்த தோட்டாக்கள்
-ரா. நாகப்பன்

முள் குத்தியது
வலிக்கவில்லை
கட்டைக்கால்
-கவிமதி



ரத்தம் வடிந்த இடத்தில்
மொய்க்கும்
ஈக்களுக்குக் கூட
திகட்டி இருக்கும்
அராஜகமே
உனக்கேன்
அடங்கவில்லை ரத்தவெறி
-தேனுசா ஈசுவரன்




விடியற்காலைகள் விடிகின்றன
உங்களிடத்தில் பனித்துளியுடனும்
எங்களிடத்தில் கண்ணிர்த் துளியுடனும்
-ஆ.முத்துராமலிங்கம்



மிச்சமிருப்பது



வரும் சந்ததிக்கென்று
எதை மிச்சம் வைத்துவிட்டுப்
போவதென்று
உலகத்துச் சனங்களெல்லாம்
கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில்
சந்ததியே மிஞ்சுமாவென்ற
கவலை என் சனத்துக்கு மட்டும்.
-ம. மதிவண்ணன்
அந்தச் சிறுமி

உன்
வீட்டில்
பூச்செடிகள் இருக்கின்றனவா

உன்
வீட்டில்
பூனைகள் இருக்கின்றனவா

உன்
வீட்டில்
புறாக்கள் இருக்கின்றனவா என்று

பார்ப்பதும்
கேட்பதுமாய்
நுழைந்த சிறுமி

உன்
வீட்டில்
அப்பா
அம்மா
இருக்கின்றார்களா என்றுபோது
வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது
கண்ணிர்.

-ம.மோகன்

Wednesday, February 25, 2009

யுத்தவாடை

பதுங்கு குழிக்குள்
துள்ளி விழுந்து
காலொடிந்து கதறும்
கன்றுக் குட்டிகள்

விமானத்தைப் பார்த்துப்
பயத்தில்
கதறும்
பறவைகள்

குண்டுச் சத்தத்தில்
தொண்டை
அடைத்துப்போன
குயில்கள்

இறந்த வீடுகளுக்குள்
குஞ்சுகளைத் தேடி
அலையும்
குருவிகள்

இரத்தம் வழியும்
பூக்களில்
யுத்த வாடையை உணரும்
வண்ணத்துப் பூச்சிகள்

இவைகளையேனும்
காப்பாற்றுங்கள்
இவற்றில்
யாரும்
தமிழர்கள்
இல்லை
-நெல்லை ஜெயந்தா

கவிஞர் யுகபாரதியின் திருமண அழைப்பிதழில் ............


தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.

-யுகபாரதி

Saturday, February 21, 2009

எஸ்.ராமகிருஷ்ணன்
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். இவருடைய எழுத்துக்கள் அனைத்தும் எளிமையாக யதார்த்திற்கு மிக அருகில் இருக்கும் . இவரது படைப்புகள் பின் வருவன.....

நாவல்கள்

உப பாண்டவம்
நெடுங்குருதி
ஏழுதலை நகரம்
'உறுபசி
யாமம்

குழந்தைகள் இலக்கியம்

கிறுகிறு வானம்
ஆலீஸின் அற்புத உலகம்
கால்முளைத்த கதைகள்

கட்டுரைகள்

விழித்திருப்பவனின் இரவு
வாக்கியங்களின் சாலை
கேள்விக்குறி
ஆதலினால்
இலைகளை வியக்கும் மரம்
எப்போதுமிருக்கும் கதை
கதாவிலாசம்
துணையெழுத்து
தேசாந்திரி

சினிமாக்களைப் பற்றி

அயல்சினிமா
பதேர்பாஞ்சாலி
சித்திரங்களின் விசித்திரங்கள்
உலக சினிமா

நாடகங்கள்
அரவான்

விருதுகள்
தமிழக அரசின் விருது 2007, கனேடிய தமிழ்சங்க விருது 2008 ஞானவாணி விருது 2004 முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது 2001 சிகேகே இலக்கிய விருது. 2008

நன்றி: விக்கிப்பீடியா

ட போல் மடங்கி கம்பளிப் பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப்பார்த்தேன்

அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்

இரண்டாம் படியில் ஏறியபொழுது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.
-கல்யாண்ஜி



தகுதி
"என்ன செய்து கொண்டு
இருக்கிறாய் இப்போ?"
என்று நானும்
இனிமேல் கேட்கலாம்
எனக்கு வேலை கிடைத்துவிட்டது
-கல்யாண்ஜி



Thursday, February 19, 2009

இன்று பிறந்த குழந்தைக்கு
உனக்காக வைத்திருந்த
முத்தத்தில்
ஃப்ளோரைட் வாசம்
உனக்காகப் பறித்த பூவில்
டீசல் தூசி

உனக்காக வாங்கிய
வாழ்த்து அட்டையில்
மரத்தின் இரத்தம்

எனது உலகத்திலிருந்து
ஏதுவுமில்லை உனக்கு

காற்றை
அழுக்குபடுத்தாமல் ஓடும்
உனது குட்டிக் கார்

வன்முறை அறியாத
இராணுவ வீரன்

சிரிக்கக் கற்றுக்கொடுக்கும்
சீனத் தங்கை

விபத்துகளைச் சந்திக்காத
விமானம்
ரயில்

மதங்களற்ற
உனது பொம்மைகளின்
உலகத்திலிருந்து
முடிந்தால் கொடு
எனக்கொரு சிரிப்பை.
-பழனிபாரதி


பிள்ளையார்
வேறுங்கல்லாய்க் கிடந்த சுதந்திரம்
வடிவம் பெற்றதில் சிதைந்துவிட்டதாய்
அவர் தனித்திருக்கும் மத்தியானங்களில்
அவருக்காக நான் யோசிப்பதுண்டு.
-பழனிபாரதி


காதலின் பின் கதவு / குமரன் பதிப்பகம் / ரூ.60

சில யதார்த்தங்கள் சுடும்

தேடல்
கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்குச்
சென்றவர்கள் !
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!
-வெ. கிருஷ்ணவேணி

யார் குருடு ?
என்ன புண்ணியமோ.....
வாசலில் கையேந்தும்
குருடனைக் கடந்துபோய்
கோயில் உண்டியலில்
போடும் பணத்தால்!
- ச.சத்தியமூர்த்தி




இடைவெளிப் பாலங்கள்
நாற்சந்தி நிறுத்தங்கள்
மேம்பாலங்களில் மறைந்தன
போக்குவரத்து லேசானது
செய்தித்தாள் விற்கும் சிறுவன்
சில்லறை சேகரிக்கும் சிறுமி
வாழ்க்கை கனமானது.
-எம்.ஏ.அப்துல் கதீம்



வலி
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்.
-ஜி.ஆர். விஜய்






Monday, February 16, 2009

நியூட்டனின் மூன்றாம் விதி

வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்



எல்லா வீடுகளையும் போலவே
கிணற்றடித் தண்ணீரை
குடித்து வளரும்
எங்கள் வீட்டிலும்.

வதங்கிச் சுருண்டு
இலைகளில் தொங்கும்
செம்பருத்திப் பூக்கள் தவிர்த்து
அம்மாவினுடையதும்
அக்காவினுடையதுமாக
விரல்களைக் கடன் வாங்கி
பச்சையாய் துளிர்க்கும்
வெண்டைக்காய்ச் செடிகள்
அத்தோட்டத்தின் தனித்தன்மை.

'மூளைக்கு நல்லது' என்று
மருத்துவ குணம் கூறி
அதன் காய்களில் ஒளிந்திருக்கும்
என் அல்ஜிப்ரா கணக்கி இற்கான
விடைகளை நோக்கி
ஆற்றுப்படுத்துவாள் அம்மா.

மதிய உணவில்
பெரும்பான்மை வகிக்கும்
அதன் 'கொழ கொழ' த் தன்மை
வழக்கம்போல் பள்ளியில்
என் விரல்களில் பிசுபிசுத்து
வராத கணக்கைப் போல்
வழுக்கிக் கொண்டிருக்கும்.

முன்புக்கு முன்பு
அதன் காம்புகள் கிள்ளி
கம்மல் போட்டுக்கொள்ளும்
அக்கா இப்போது,
வைரங்களை நோக்கி
விரியுமொரு கனவில்
' உங்களுக்கு வாக்கப்பட்டு
என்னத்தைக் கண்டேன்' என்று
அத்தானிடம் பொருமுகி்றாள்.

கடன்முற்றித் தத்தளித்த சூழலில்
கியான்சந்த் அண்ட் சன்சுக்கு
கைநடுங்கி கையெழுதுத்திட்டு
வீட்டுடன் தோட்டமும்
விற்றார் அப்பா .

முன்வாசலில் தொங்கும்
குரோட்டன்ஸ் செடி கடந்து
பிஞ்சு வெண்டைகள் பொறுக்கி;
கூர்முனை ஒடித்து;
தள்ளு வண்டிக்காரனிடம்
பேரம் பேசுகையில்
இப்போது உணர்கிறேன் ............

ஒவ்வொரு வெண்டைக்காயிலும்
ஒளிந்திருக்கிறார்கள்
மென்மையான
விரல் கொண்ட
ஒரு அம்மா ;

கனவுகள் விரியும்
ஒரு அக்கா ;

கைகள் நடுங்கும்
ஒரு தந்தை ;

மற்றும்
கணக்குகள் துரத்தும்
ஒரு பையன்.
-நா. முத்துக்குமார்

நியூட்டனின் மூன்றாம் விதி



மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம்
அதிகப்படியானது.
உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில் .
திட்டமிட்டு நகர்த்தும்
சாமார்த்தியமும் உனக்கில்லை.
பாக்கு இடிக்கும் பாட்டி;
சதுர அம்மியில்
சார்க் புர்ரக்கென்ற
குழவி நகர்த்தும் அம்மா;
ஏதேதோ பாட்டுக்கெல்லாம்
எம்பிக்குதிக்கும் குழந்தைகள்;
என
உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.
உன்னை பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா.......
தலையணையையும் மீறி
உன்காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி.
-நா. முத்துக்குமார்

Sunday, February 15, 2009

பாரதி ஜிப்ரான் கவிதைகள்

காடுகளைக்
கவனி
வயல்களை
நேசி
மழையை
ரசி
வறுமையின்
பொருளை
அகராதியில்
தேடு.
-பாரதி ஜிப்ரான்



விலகாதே
விலகாதே
ஒன்றாய்ச்
சேர்.......
மழைத்துளிக்
கூட்டம்
அணையை
உடைக்கும்.
-பாரதி ஜிப்ரான்



வெய்யிலைச்
சுமந்து
நிழல் பரப்பும்
மரங்களில்
உணரலாம்
தாயின் மனசை.
-பாரதி ஜிப்ரான்


கடவுளுக்காக
மொட்டையடித்துக்
கொள்கிறான்
மனிதன்.......
மனிதனுக்காக
ஒரு மயிரையும்
இழக்கத் தயாராய் இல்லை
கடவுள்.
-பாரதி ஜிப்ரான்


புத்தகம் : முன் பனிக்காலம்/அகநி வெளியிடு/30 ரூபாய்

Saturday, February 14, 2009

பழனிபாரதி கவிதைகள்

உறைந்த நதி

எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய விரல்கள் இல்லை

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது பூசணி

உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டுவிட்டாய்

உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால்
ஒரு கடிதம் எழுது.
-பழனிபாரதி

Thursday, February 12, 2009

தெரிந்துக்கொள்க தெரியப்படுத்துக








புரட்சி மொழிகள்




Wednesday, February 11, 2009

My CHE - Symbol Of Rebellion






















Tuesday, February 10, 2009

அறிவுமதி கவிதைகள்



பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.
-அறிவுமதி

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
-அறிவுமதி




மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.
-அறிவுமதி


இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.!
-அறிவுமதி (சிறைச்சாலைக்காக)


Monday, February 9, 2009

என் உலகில் உங்களுக்கும் இடம் உண்டு


நான் படித்த, எனக்கு பிடித்த கவிதைகளின் தொகுப்பு இது.

தினமும் நிலா பார்ப்பதற்க்கு நேரம் ஒதுக்குபவரா நீங்கள் ? எங்கேனும் மரம் வெட்டப்படுவதை கண்டு மனம் பதற்றம் அடைபவரா நீங்கள் ? கோடை காலத்தை ரசிப்பவர் எனினும், மழை கால வருகைக்காக ஏங்குபவரா நீங்கள் ? உங்களை கடந்து scooty- யில் யாரோ சென்ற போதும் , முன் பைக்கில் பின் சீட்டில் அம்மா மடியில் இருக்கும் குழந்தையை கண் வாங்காமல் ரசிப்பவரா நீங்கள் ? ரயில் பயணம் , ஜன்னலோர பேருந்து பயணம் என்றால் ஒரு குழந்தையை போல் குதூகலிப்பவரா நீங்கள் ? வார்த்தைகளை விட மௌனங்கள் மிகுந்த கனமானவை என்று உணர்ந்தவரா நீங்கள் ? நல்ல கவிதைகள் , சிறுகதைகள் வருமென வாரவாரம் ஆனந்தவிகடன் தவறாமல் வாசிப்பவரா நீங்கள் ? சக மனிதர்களை மிகவும் நேசிப்பவரா நீங்கள் ? இவற்றுக்கு எல்லாம் உங்கள் பதில் ' ஆம்' என்றால் , என் உலகில் உங்களுக்கும் இடம் உண்டு .

ப்ரியமுடன்
ராஜ்குமார்

Friday, February 6, 2009

நெருப்புக் கவிதைகள்


தேர் வரா வீதி
தேர் வரா வீதியெங்கள் வீதி
தேர்போலும்
வந்ததே கிடையாது பேருந்து

ஒரே ஒரு முறை பிளசர் வந்தது
செத்துப்போன லதாவை இறக்கிவிட

அதுமுதல் பிளசரின் வண்ணம்
கருப்பென்று சொல்கின்றன
குதியாட்டம் போட்ட குழந்தைகள்

டிராக்டரோ லாரியோ
ஆட்களை ஏற்றிப்போக வருவதுண்டு
மாநட்டுப் பந்தலுக்கு

மெய்யாலுமே தெரியாது
ஏரோப்பிளேனுக்கும்
எலிகாப்படருக்குமுள்ள வித்தியாசம்

எதுவும் வரத் தயங்குகிற எங்களூருக்கு
ஏன் எப்போதும் வந்து தொலைக்கிறது
பஞ்சமும் சாதிப் பிணக்கும்
- யுகபாரதி



வலியிழந்தவள்
அடி, மிதி, உதை
அஞ்சமாட்டேன்.
வெகு நேரமாகிவிடாது
போதையில் நீயிருக்கையில்
ரசத்தில் துளி விஷம்
சேர்த்துவிடவோ,
ரயிலேறி நீ தொட முடியா தூரம்
போய்விடவோ.

ஆனால்,
நீயெனக்குச் செய்யும்
சித்ரவதைகள்
உதவியாயிருக்கும் ;
எனக்கும் என் பிள்ளைக்கும்
திரும்ப நீ தேவையென்ற உணர்வு
தோன்றவிடாமலிருக்க.

- பாரதிப்ரியா






இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின்
பார்வை தவிர்க்க
பேருந்துக்கு
வெளியே பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம் எதை
எதிர்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி






கண்ணீருடன்..............

உனது தந்தையின் இறப்புச் செய்தி
ஈ- மெயிலில் வருகிறது.
சாப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்
தகப்பன் நினைவுகளைத் தேடிஎடுத்து
கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்
கொஞ்சமாய் அழுகிறாய்.
உயிர் மீட்க உதவாத உனது டாலர்களோடு
நீ வந்து சேரும்போது
எரிந்த சாம்பல்கூட எஞ்சியிருக்காது.
அதனாலென்ன நண்பனே .............
இறந்துபோனவர்களுடன் தொடர்புகொள்ள
வெப்சைட் வராமலா போய்விடும் ?

-எஸ்.பாபு



Thursday, February 5, 2009

கவிதைகளா? தீப்பிழம்பா?