Thursday, February 26, 2009

பட்டாம்பூச்சி விற்பவன்

பதிவுகள்
மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்.
-நா. முத்துக்குமார்

No comments:

Post a Comment