Tuesday, January 27, 2009

எனது கிளிக் + துணுக்கு...........



ஒற்றை பனை மரம்
மௌனமாய் மொழி பெயர்க்கிறது...........
என் வாழ்க்கையை.

வயதான காலத்தில்
குடை கூட துணையாய் ...............
பிள்ளைகள் ?????????
எங்கேனும் இருக்க கூடும்
மரமாகவோ? முடமாகவோ?

Friday, January 23, 2009

பதிவுகள்..................

அட்சயதிரிதியை
தங்கம் வாங்கினான்
கூடியது
கடன்

சனி
6- ம் வீட்டில்
புதன்
2- ம் வீட்டில்
நான் வாடகை வீட்டில்

- அ. ப. சிவா ( கருப்பு காத்து)


வலி
ஓங்கி ஒலிக்கும்
கெட்டி மேளத்தில்
அமுங்கி போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்..................
- வித்யாஷங்கர்

Thursday, January 22, 2009

படித்ததில் பிடித்தது.........

பூவின் வலி

அழகு குலையாத வண்ணங்களால்
நெய்யப்பட்ட உடுப்பாய்த்
தொங்கியது பூ
இரவு பகலென்று காலம் நிறம் மாற
சூரியன் தனது கரம் நீட்டப்
பூவின் உடை
உலர்ந்து உதிர்ந்தது
மிருக வாய் சந்தித்த
பறவையின் உதிரும் இறகுகளைப்போல
பூமியெல்லாம் இரத்தத்துளிகள்.

-குட்டி ரேவதி













இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
இன்றும் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு…
-Unknown










யார் யாரோ அணைத்து மகிழ்ந்தாலும்
அனைத்தும் கொடுத்தாலும்
இறுதியில் அன்னையைத் தேடும்
சிறு குழந்தை போல்
உன்னையே தேடுகிறது இதயம் …
-Unknown


ஆண்டின் இறுதியில்
என்னை பார்த்து காலண்டர் கேட்டது,
என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்........
-Unknown

நான் உன்னிடம்
பேசியதை விட
நீ என்னிடம்
பேசியதை விட
நம்மைப்பற்றி
அதிகமாய் பேசுகிறது ஊர்.
-திருவைக்குமரன்.








Wednesday, January 21, 2009

வலி - அறிவுமதியின் நூல்.

இலங்கையிலிருந்து தப்பிப்பிழைத்து, கடல் கடந்து இந்தியக்கரையில் சேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்துத்தந்திருக்கிறார்.

இதை வெறும் உணர்ச்சிச் சொற்களால் சேர்க்கப்பட்ட கவிதைகளாக அல்ல; அக்கறையுள்ள ஒரு கவிஞன் நெஞ்சிலிருந்து கசிந்து சொட்டும் இரத்த திவலைகளாகவே உணர முடிகிறது .
- இரா. நல்லகண்ணு


வலியின் பதிவுகள் சில ............................



இராமேஸ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்
நாங்கள் குதித்துக்
கரையேறுகிறோம்.
- அறிவுமதி



மீனை அரிகையில்
கிடைத்தது
குழந்தையின்
கண்.
- அறிவுமதி



இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்...
- அறிவுமதி

எனக்கு பிடித்த கவிதைகள்.......

" வீடற்ற குழந்தையொன்று
சோப்பு நுரையை ஊதியபடி
உடைத்தெறிகிறது
ஓராயிரம் உலகங்களை "

- பா. மீனாட்சி சுந்தரம்


ஒரு பைத்தியக்காரனைப் போல்
நான் இன்னும் உன்னைப் பற்றியே கனவு காண்கிறேன்.
நீயோ பிள்ளை பெற்று பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பகலில் உறங்கப் பழகிவிட்டாய்.
-Unknown

மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்
கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
என் எதிரில்
யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
'மீன் குழம்பாவது கிடைக்குமா?'எனக் கேட்டு
நிறம் மங்கியபீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும் கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.
- நா. முத்துக்குமார்















"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"
- இரா. பார்த்திபன்


"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவதுசந்தித்துக் கொள்ளட்டுமே"
-அறிவுமதி

உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே
அளவான புன்னகை
நறுக் பேச்சு
தடம் விலகலில் வெளியேறும் லாவகம்
என உனக்கான பிம்பங்களை
அப்படியே வைத்துக்கொள்
தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை
-அய்யனார்