Wednesday, January 21, 2009

வலி - அறிவுமதியின் நூல்.

இலங்கையிலிருந்து தப்பிப்பிழைத்து, கடல் கடந்து இந்தியக்கரையில் சேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்துத்தந்திருக்கிறார்.

இதை வெறும் உணர்ச்சிச் சொற்களால் சேர்க்கப்பட்ட கவிதைகளாக அல்ல; அக்கறையுள்ள ஒரு கவிஞன் நெஞ்சிலிருந்து கசிந்து சொட்டும் இரத்த திவலைகளாகவே உணர முடிகிறது .
- இரா. நல்லகண்ணு


வலியின் பதிவுகள் சில ............................



இராமேஸ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்
நாங்கள் குதித்துக்
கரையேறுகிறோம்.
- அறிவுமதி



மீனை அரிகையில்
கிடைத்தது
குழந்தையின்
கண்.
- அறிவுமதி



இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்...
- அறிவுமதி

No comments:

Post a Comment