Thursday, January 22, 2009

படித்ததில் பிடித்தது.........

பூவின் வலி

அழகு குலையாத வண்ணங்களால்
நெய்யப்பட்ட உடுப்பாய்த்
தொங்கியது பூ
இரவு பகலென்று காலம் நிறம் மாற
சூரியன் தனது கரம் நீட்டப்
பூவின் உடை
உலர்ந்து உதிர்ந்தது
மிருக வாய் சந்தித்த
பறவையின் உதிரும் இறகுகளைப்போல
பூமியெல்லாம் இரத்தத்துளிகள்.

-குட்டி ரேவதி













இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
இன்றும் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு…
-Unknown










யார் யாரோ அணைத்து மகிழ்ந்தாலும்
அனைத்தும் கொடுத்தாலும்
இறுதியில் அன்னையைத் தேடும்
சிறு குழந்தை போல்
உன்னையே தேடுகிறது இதயம் …
-Unknown


ஆண்டின் இறுதியில்
என்னை பார்த்து காலண்டர் கேட்டது,
என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்........
-Unknown

நான் உன்னிடம்
பேசியதை விட
நீ என்னிடம்
பேசியதை விட
நம்மைப்பற்றி
அதிகமாய் பேசுகிறது ஊர்.
-திருவைக்குமரன்.








No comments:

Post a Comment