மார்கழிமாத கோலத்தின்
புள்ளிகளாகிப் போயின
தவறிவிழுந்த தோட்டாக்கள்
-ரா. நாகப்பன்
முள் குத்தியது
வலிக்கவில்லை
கட்டைக்கால்
-கவிமதி
ரத்தம் வடிந்த இடத்தில்
மொய்க்கும்
ஈக்களுக்குக் கூட
திகட்டி இருக்கும்
அராஜகமே
உனக்கேன்
அடங்கவில்லை ரத்தவெறி
-தேனுசா ஈசுவரன்
Thursday, February 26, 2009
Labels:
அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment