Thursday, February 19, 2009

சில யதார்த்தங்கள் சுடும்

தேடல்
கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்குச்
சென்றவர்கள் !
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!
-வெ. கிருஷ்ணவேணி

யார் குருடு ?
என்ன புண்ணியமோ.....
வாசலில் கையேந்தும்
குருடனைக் கடந்துபோய்
கோயில் உண்டியலில்
போடும் பணத்தால்!
- ச.சத்தியமூர்த்தி




இடைவெளிப் பாலங்கள்
நாற்சந்தி நிறுத்தங்கள்
மேம்பாலங்களில் மறைந்தன
போக்குவரத்து லேசானது
செய்தித்தாள் விற்கும் சிறுவன்
சில்லறை சேகரிக்கும் சிறுமி
வாழ்க்கை கனமானது.
-எம்.ஏ.அப்துல் கதீம்



வலி
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்.
-ஜி.ஆர். விஜய்






No comments:

Post a Comment