Thursday, February 26, 2009

அந்தச் சிறுமி

உன்
வீட்டில்
பூச்செடிகள் இருக்கின்றனவா

உன்
வீட்டில்
பூனைகள் இருக்கின்றனவா

உன்
வீட்டில்
புறாக்கள் இருக்கின்றனவா என்று

பார்ப்பதும்
கேட்பதுமாய்
நுழைந்த சிறுமி

உன்
வீட்டில்
அப்பா
அம்மா
இருக்கின்றார்களா என்றுபோது
வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது
கண்ணிர்.

-ம.மோகன்

No comments:

Post a Comment