மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப்பார்த்தேன்
அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்
இரண்டாம் படியில் ஏறியபொழுது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.
-கல்யாண்ஜி

தகுதி
"என்ன செய்து கொண்டு
இருக்கிறாய் இப்போ?"
என்று நானும்
இனிமேல் கேட்கலாம்
எனக்கு வேலை கிடைத்துவிட்டது
-கல்யாண்ஜி

No comments:
Post a Comment