ட போல் மடங்கி கம்பளிப் பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப்பார்த்தேன்
அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்
இரண்டாம் படியில் ஏறியபொழுது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.
-கல்யாண்ஜி
தகுதி
"என்ன செய்து கொண்டு
இருக்கிறாய் இப்போ?"
என்று நானும்
இனிமேல் கேட்கலாம்
எனக்கு வேலை கிடைத்துவிட்டது
-கல்யாண்ஜி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment