Saturday, February 6, 2010

காதல் கவிதைகள்2

அணு அணுவாய்ச் சாவதென
முடிவெடுத்தப் பிறகு
காதல் சரியான வழிதான்
- அறிவுமதி

தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் படுத்திருக்கும்
ஒற்றைப்பூ........என் காதல்.
நீ நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?

- பழனிபாரதி





அன்பு என்னும் தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்
அம்மா என்று சொன்னேன்
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னமும் சிறியதாக சொல்லியிருப்பேன்
நீ என்று.
-தாஜ்






சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்
- ரா. பார்த்திபன்




எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?
- தபூ சங்கர்






இந்த நிமிடம்
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்
என்று சிந்திப்பதிலேயே
போய் விடுகின்றன
என் எல்லா நிமிடங்களும்.

- லெனின் பிரசன்னா





எல்லோரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தபடுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக.......

-பாரதி ஜிப்ரான்









3 comments:

Anonymous said...

super

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வாழ்த்துகள் பல...
என்றும் அன்புடன்,
ஜகதீஸ்வரன்.
Jackpoem.blogspot.com.

வைகறை நிலா said...

Very nice collection..

Post a Comment