Thursday, June 11, 2009

யாழன் ஆதி

வண்ணம்

மேய்ந்து திரும்பும்
மாடுகளில் தெரியும் ஒருவகை
பச்சைநிற வாசனை

பறவையின் சிறகில்
பிரதிபலிக்கும் நீலம்
வானத்திற்கானது

பூக்களிலிருந்து பட்டாம்ப்பூச்சிகளுக்கோ
அல்லது பட்டாம் பூச்சிகளிலிருந்து
பூக்களுக்கோ மாறியிருக்கலாம்
வண்ணங்கள்

நீருக்குள் தெரியாத வண்ணம்
மீனுக்குப் புலப்பட்டிருக்கலாம்
நீரில்
உறிஞ்சிய
வண்ணங்களில் மீன்கள்.

-யாழன் ஆதி

No comments:

Post a Comment