நான் மழையில் முளைவிட்ட காளான்
குடையிருந்தும் நனைகிறேன் ...
- ந லக்ஷ்மி சாகம்பரி
எது சுகம்?
எதை பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா
மழையை பற்றி எழுதுவது சுகமா?
- வெண்ணிலா

இழந்த மழை....
இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.
முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்நீர்த்துளிகள்
நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!!
- காயத்ரி

நீ அசைத்த கிளை
பெய்த மழை போல்
இல்லை ஒரு மழையும்................
-Unknown










