நான் மழையில் முளைவிட்ட காளான்
குடையிருந்தும் நனைகிறேன் ...
- ந லக்ஷ்மி சாகம்பரி
எது சுகம்?
எதை பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா
மழையை பற்றி எழுதுவது சுகமா?
- வெண்ணிலா

இழந்த மழை....
இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.
முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்நீர்த்துளிகள்
நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!!
- காயத்ரி

நீ அசைத்த கிளை
பெய்த மழை போல்
இல்லை ஒரு மழையும்................
-Unknown
2 comments:
very nice one.
எதை பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா
மழையை பற்றி எழுதுவது சுகமா....very nice.....Shankar
இழந்த மழை....
இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.
முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்நீர்த்துளிகள்
நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!!
very very nice
Post a Comment