Monday, February 9, 2009

என் உலகில் உங்களுக்கும் இடம் உண்டு


நான் படித்த, எனக்கு பிடித்த கவிதைகளின் தொகுப்பு இது.

தினமும் நிலா பார்ப்பதற்க்கு நேரம் ஒதுக்குபவரா நீங்கள் ? எங்கேனும் மரம் வெட்டப்படுவதை கண்டு மனம் பதற்றம் அடைபவரா நீங்கள் ? கோடை காலத்தை ரசிப்பவர் எனினும், மழை கால வருகைக்காக ஏங்குபவரா நீங்கள் ? உங்களை கடந்து scooty- யில் யாரோ சென்ற போதும் , முன் பைக்கில் பின் சீட்டில் அம்மா மடியில் இருக்கும் குழந்தையை கண் வாங்காமல் ரசிப்பவரா நீங்கள் ? ரயில் பயணம் , ஜன்னலோர பேருந்து பயணம் என்றால் ஒரு குழந்தையை போல் குதூகலிப்பவரா நீங்கள் ? வார்த்தைகளை விட மௌனங்கள் மிகுந்த கனமானவை என்று உணர்ந்தவரா நீங்கள் ? நல்ல கவிதைகள் , சிறுகதைகள் வருமென வாரவாரம் ஆனந்தவிகடன் தவறாமல் வாசிப்பவரா நீங்கள் ? சக மனிதர்களை மிகவும் நேசிப்பவரா நீங்கள் ? இவற்றுக்கு எல்லாம் உங்கள் பதில் ' ஆம்' என்றால் , என் உலகில் உங்களுக்கும் இடம் உண்டு .

ப்ரியமுடன்
ராஜ்குமார்

1 comment:

Anitha Baheerathan said...

Wonderful :)... -Anitha Baheerathan

Post a Comment